ஆப்நகரம்

முன்னாள் டிஜிபி மரணம்...எம்ஜிஆருடன் நட்பில் இருந்தவர்!

தமிழக முன்னாள் டிஜிபி கே. ராதாகிருஷ்ணன் உடல்நல குறைவால் சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92.

Samayam Tamil 3 Nov 2020, 6:47 pm
கடந்த 1983-87 வரை, தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்தவர் கே. ராதாகிருஷ்ணன். அதற்கு முன் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக, சென்னைமாநகர காவல் ஆணையராக பணியாற்றியவர்.
Samayam Tamil முன்னாள்  டிஜிபி
முன்னாள் டிஜிபி கே. ராதாகிருஷ்ணன்


சென்னை உளவுப்பிரிவு டிஐஜி, சட்டம் ஒழுங்கு ஐஜி, டிஜிபி தமிழ்நாடு என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். எழுத்தாளராக இருந்தவர். Kirakki என்ற பெயரில் புத்தகங்கள் எழுதி உள்ளார். சமூக ஆர்வலராக இருந்தவர்.

இவர் போக்குவரத்து துணை ஆணையராக இருந்தபோது தான் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்காக ஜப்பான் சென்று அங்கு உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு வந்த பிறகு அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது.

கொரோனா: சென்னை மக்களுக்கு ஆறுதல் செய்தி!

டிஜிபி கே. ராதாகிருஷ்ணன் முன்னாள் முதல்வர் காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் ஆகியோர் முதல்வராக இருந்த காலத்தில் பணியாற்றியவர். அவர்களுடன் நட்பில் இருந்துள்ளார்.

அண்மை காலமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். ஓய்வு பெற்ற டிஜிபி ராதாகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு பேர் உள்ளனர்.

கொரோனா காலத்தில் மதுக்கூடமாக மாறியுள்ள அரசுப் பள்ளிக் கூடம்!

அவரின் இறுதி சடங்கு பங்கேற்க விரும்புவோர் தனிமனித இடைவெளி, முககவசங்கள் அணிந்து பங்கேற்கும்படி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை காலை 11.30 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி