ஆப்நகரம்

பள்ளி ஆசிரியர்கள் ஹேப்பி; திடீரென வந்தது அரசாணை!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள திடீர் அரசாணை ஒன்று, பள்ளி ஆசிரியர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளது. இதனை ஆசிரியர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Samayam Tamil 22 Nov 2021, 8:25 am

ஹைலைட்ஸ்:

  • பள்ளி ஆசிரியர்கள் செம...ஹேப்பி
  • தமிழக அரசு பரபரப்பு அரசாணை
  • 35 வகை பயிற்சிகள் வழங்கப்படும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வி துறையின் வழிகாட்டுதல்படி பயிற்சிகள் அளிப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார்.


அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு 35 விதமான பயிற்சிகள் அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெய் பீம்: படக்குழு செய்த பெரிய தவறு; கேள்வியால் துளைக்கும்.. கிருஷ்ணசாமி!

இந்த திட்டத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி, ஆங்கில இலக்கணம், செயல்வழி கற்றல், புதிய பாடத்திட்டம், ஆங்கில பேச்சாற்றல், கணினி, அறிவுத்திறன் உள்ளிட்ட 35 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

கொளுத்தி போட்ட எஸ்.ஜே.சூர்யா; கொழுந்துவிட்டு எரிகிறது மாநாடு!

இந்த திட்டத்தால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும் 1,138 ஆதி திராவிடர் நல பள்ளிகள், 318 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட 1,464 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று தங்களது கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்வர்.

வன்னியர் ஆதரவு இழந்த பாமக; வரிந்து கட்டும் காங்கிரஸ் எம்.பி!

சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றம் அடைய செய்ய உரிய கல்வி அளித்து முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி ஆதிதிராவிடர் நலத்துறை செயலல்படுத்தி வருகிறது.

நடிகர் சூர்யா மீது புதிய புகார்; சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி!

அந்த வகையில் இளம் வயதில் இருந்தே மாணாக்கர்கள் ஆங்கில இலக்கணம், பேச்சாற்றல், கணினி போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி