ஆப்நகரம்

ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்; இறந்தது யாருன்னு பாருங்கள்!

சாலை விபத்தில் பலியான எஸ்.ஐ உள்பட 2 போலீஸ்காரர்களுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Jun 2022, 7:44 pm
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இத பகுதியில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil பலியான காவலர்கள்
பலியான காவலர்கள்


இதனால் போக்குவரத்து திருப்பி விட‌ப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை வேகமாக வந்த கார் சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பேரல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் ராசிபுரம் காவல் நிலைய காவலர் தேவராஜன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த சுற்றுலா வேன் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் தேவராஜன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்து மக்கள் கட்சியில் சீமான்?; அர்ஜுன் சம்பத் திடீர் அறிவிப்பு!

மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுச்சத்திரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் மீட்டு, ராசிபுரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி டிவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ராசிபுரத்தில் பணியின்போது உயிரிழந்த துணிச்சலான காவலர்கள் சந்திரசேகர் மற்றும் தேவராஜன் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி