ஆப்நகரம்

120 மாணவர்களுக்கு காலை உணவு: கலக்கும் அரசு பள்ளி ஆசிரியர்

சென்னை, அரசுப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 120 மாணவர்களுக்கு, தனது சொந்த செலவில் காலை உணவு வழங்கி வரும் சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Aug 2018, 11:50 am
சென்னை, அரசுப்பள்ளியைச் சேர்ந்தஆசிரியர் ஒருவர் 120 மாணவர்களுக்கு, தனது சொந்த செலவில் காலை உணவு வழங்கி வரும் சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 12


சென்னை, கொடுங்கையூரில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், இளமாரன் என்பவர் ஆசிரியராகபணியாற்றி வருகிறார்.இந்த பள்ளியில் படிக்கும்மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால், மயக்கம் மற்றும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தனர். இதனைக் கவனித்த இளமாரன் மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தனது விருப்பத்தை பள்ளியின் தலைமை ஆசியரானமுனி ராமையாவிடம் தெரிவித்து, காலை உணவு சாப்பிடமால் வருபவர்களை கணக்கெடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி காலை உணவு சாப்பிடாமல் வரும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.


தினமும் காலை7.30 மணியிலிருந்து8 மணி வரை 10 வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவார். அதைத்தொடர்ந்து காலை 8.20 மணி முதல் 8. 50 மணிவரை 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவார்.இதுதொடர்பாக இளமாரன் கூறுகையில்’ மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது மகிழ்ச்சியை தருகிறது. அருகில் உள்ள அம்மா உணவகத்திலிருந்து இட்லி மற்றும் பொங்கல் வாங்குவோம். இதுபோல பல முயற்சிகளை எல்லா ஆசிரியர்களும் எடுத்து வருகின்றனர் என்று கூறினார்

இதுதொடர்பாக பள்ளியின் தலைமையாசிரியர் முனி ராமையா கூறுகையில்’ நான் முதலில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ளஎம்எம்டிஏ காலனியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில்பணியாற்றினேன். நான் முதல் வேலைக்கு சேர்ந்த போது அந்த பள்ளியில் 380 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அடுத்த 4 வருடங்களில் 980 மாணவர்கள் சேர்ந்தார்கள்.அதேபோல் 11 ஆசியர்கள் வேலை செய்த இடத்தில் தற்போது 35 ஆசிரியர்கள் வேலை செய்துவருகின்றனர். அதேபோல் இங்கும்மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த விரும்புகிறேன். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எல்லா வருடமும் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.பள்ளியின்8 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எங்கள் பள்ளியில்தான் முதல் முறையாக பையோமெட்ரிக் மூலம் ஆசியர் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்