ஆப்நகரம்

சென்னையில் மறு வாக்குப்பதிவு; தேர்தல் ஆணையம் திடீர் அதிரடி!

சென்னையில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டு மாநில தேர்தல் ஆணையம் அதிரடி காட்டியுள்ளது.

Samayam Tamil 20 Feb 2022, 5:14 pm
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என, 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதியான நேற்று தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்



இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது. தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு 50 சதவீதத்தை கூட தொடவில்லை.

கலெக்டர் திடீர் அதிரடி; அரண்டு போய் கிடக்கும் அதிமுக!

நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்து அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொன்றையும் பெட்டியில் வைத்து மூடி சீல் வைத்தனர்.

இதன் பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. மாநிலம் முழுவதும் மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி ஊரில் இறங்கி அடித்த எஸ்.பி; அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!

இந்நிலையில் சென்னையில் 2 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51: வாக்குச்சாவடி எண் 1174 மற்றும் வார்டு எண் 179: வாக்குச்சாவடி எண் 5059 ஆகிய 2 வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி ஒரு மணி நேரமான 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி