ஆப்நகரம்

தமிழகத்தில் தாமரை மலர்ந்தது என்று நினைத்து தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளுங்கள்: தமிழிசை

பொங்கல் பொங்கிய தருணத்தில் பொங்கலோ பொங்கல் பாதுகாப்பான பொங்கல், பாதுகாப்பான தடுப்பூசி பொங்கல்,கொரோனாவை விரட்டும் பொங்கல், என தமிழிசை சௌந்தர்ராஜன் முழக்கமிட்டார்.

Samayam Tamil 17 Jan 2021, 2:35 pm
தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று, முக மலர்ச்சியோடு தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilisai


தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார். வீட்டின் முன்பு கோலமிட்டு மண்பானையில் பொங்கல் வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன், பொங்கல் பொங்கிய தருணத்தில் பொங்கலோ பொங்கல் பாதுகாப்பான பொங்கல், பாதுகாப்பான தடுப்பூசி பொங்கல்,
கொரோனாவை விரட்டும் பொங்கல், என தமிழிசை சௌந்தர்ராஜன் மகிழ்ச்சியோடு முழக்கமிட்டார்.
மேலும் தாமரை போன்ற மலர்ந்த முகத்தோடு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் :

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் எனவும் பாதுகாப்பான பொங்கலாக இந்த வருடம் அமைந்துள்ளது என்றார். சென்ற வருடத்தை விட இந்த வருடம் பாதுகாப்பாக உள்ளோம் கடந்த ஆண்டு PANDEMIC YEAR இந்த ஆண்டு PROTECTIVE YEAR என்றார்.

நெய் வியாபாரி வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்... 100 பவுன் நகை கொள்ளை?

எந்த நாட்டையும் சாராமல் மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி எனவும் ஒரு தாய் 10 மாதங்களாக குழந்தை பெற்றடுப்பது போன்று நம் நாட்டின் விஞ்ஞானிகள் நம்மை இரவு பகல் பாராமல் உழைத்து நம்மை காத்தனர் என்றார்..

மேலும் இது நன்றி சொல்லும் தடுப்பூசி நமது நாடு 150 நாடுகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தர உள்ளோம். தடுப்பூசி விவகாரத்தில் தயவு செய்து அரசியலை செய்ய வேண்டாம் என்றார்

அனுபவன் வாய்ந்த விஞ்ஞானிகள் சேர்ந்து இந்த கொரோணா தடுப்பு மருந்து கண்டு பிடித்துள்ளனர்
நேற்று 2 லட்சம் பேர் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட வில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் முன் களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதே அவசியம்
பிரதமரும், அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு தடுப்பூசி வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

அடுத்த செய்தி