ஆப்நகரம்

ஃபேஸ்புக்கில் பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அநாகரிக பதிவு- நடிகர் எஸ்.வி. சேகருக்கு வலுக்கும் கண்டனங்கள்

பெண் பத்திரிக்கையாளர்களை குறித்து ஃபேஸ்புக் வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட எஸ்.வி. சேகருக்கு தமிழகத்தில் இயங்கும் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Samayam Tamil 20 Apr 2018, 11:01 am
பெண் பத்திரிக்கையாளர்களை குறித்து ஃபேஸ்புக் வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி. சேகருக்கு தமிழகத்தில் இயங்கும் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Samayam Tamil EDIT_SV_SEKHAR
நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்


பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை மறைமுகமாக விமர்சித்தத்தற்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கான பிரச்னை முடிவதற்குள், பாஜகவை சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுயிருந்தார்.

நடிகர் எஸ்.வி. சேகரின் ஃபேஸ்புக் பதிவு



இதற்கு கடுமையான கண்டன குரல்கள் எழ, உடனே அந்த பதிவை அவர் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் பலரும் எஸ்.வி.சேகரின் ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட தொடங்கினர்.

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்கவேண்டும் என அச்சு ஊடகம், தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடக செய்தியாளர்கள் கண்டன குரல்களை எழுப்ப தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் பத்திரிக்கையாளர்கள் மீது அநாகரிகமாக கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள அனைத்து வித செய்தியாளர்களும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜனை சந்தித்து எஸ்.வி. சேகரின் ஃபேஸ்புக் பதிவிற்கு நடவடிக்கை எடுக்குமாறு இன்று மாலை கடிதம் அளிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி