ஆப்நகரம்

3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்; கலெக்டர் உத்தரவு

திருவள்ளூவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மூன்று நாட்களும் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சி தலைவர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 11 Jan 2018, 4:39 pm
திருவள்ளூவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மூன்று நாட்களும் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சி தலைவர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil tasmac chennai would be shut for three days on january 15 26 and 31
3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்; கலெக்டர் உத்தரவு


தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும் ஹோட்டல்கள் மூலமாகவும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் 15ம் தேதி திருவள்ளூவர் தினம் , 26ம் தேதி குடியரசு தினம், 31ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் என அடுத்தடுத்து வருவதால், இந்த தினங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது என்று சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த மூன்று நாட்களும் பார், கிளப், ஹோட்டல்களிலும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும், தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

அடுத்த செய்தி