ஆப்நகரம்

பூட்டு போதாது கடைக்கு சீல் வைச்சிடுங்க; அந்த கடைகளில் அப்படி என்ன விசேஷம்?

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஊரடங்கு நேரத்தில் மது பாட்டில்கள் திருடு போவதை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 May 2021, 9:51 am
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்களை காக்கும் வகையில் நேற்று முதல் வரும் 24ம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளன.
Samayam Tamil டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.


சென்னையை ஒட்டியுள்ள மாமல்லபுரம் மிகப்பெரிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மாமல்லபுரம், பூஞ்சேரி, வடகடம்பாடி, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை வியாபாரம் களைகட்டியது.

ஒரே நாளில் 20 பேர் பலி; கொரோனாவால் மக்கள் கவலை

மது பிரியர்கள் அதிகளவில் குவிந்து தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை சென்றனர். தாமதமாக வந்த மது பிரியர்கள் கடைகள் மூடப்பட்டதை பார்த்து எதையோ பறிகொடுத்தது போன்ற முகத்துடன் ஏமாற்றத்துடன் சென்றனர்.

விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு அனைத்து டாஸ்மாக் கடைகளும் சீல் வைக்கப்பட்டன. மேலும் ஊரடங்கு நாட்களில் குடிகாரர்கள் மது பாட்டில்களை கொள்ளையடிக்காத வகையில் மாமல்லபுரம் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் கதவுகளையும் பூட்டி இரும்பு கம்பி மூலம் வெல்டிங் வைத்து சீல் வைக்கப்பட்டது.

அடுத்த செய்தி