ஆப்நகரம்

வீட்டு வாசலில் சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

கழிவுநீர் லாரி மோதியதில், வீட்டு வாசலில் சைக்களில் ஓட்டிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Dec 2020, 5:04 pm
சென்னை, சோழிங்கநல்லூர் சத்தியவாணி முத்து 2வது தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ், 38. இவரது மனைவி கோகிலா, 34. இவர்களது மகன் அபிஷேக், 10. இச்சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
Samayam Tamil கழிவுநீர் லாரி -சென்னை
கழிவுநீர் லாரி -சென்னை சோழிங்நல்லூர்


இன்று காலை 11 மணியளவில் வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த கழிவுநீர் லாரி சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி அபிஷேக் கீழே விழுந்ததில், லாரியின் பின் சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியதில் தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

போலீசின் கையை வெட்டிய இளைஞர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு!

சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள், லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த 'ஆப்'களை யூஸ் பண்ணாதீங்க மக்களே... சென்னை போலீஸ் அட்வைஸ்!

இதுதொடர்பாக, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரான வந்தவாசியை சேர்ந்த பிரபாகரன், 27 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி