ஆப்நகரம்

மோப்ப நாய்களுக்குப் பயந்து திருடிய நகைகளை திரும்ப ஒப்படைத்த திருடன்!!

பெரம்பூரில் மோப்ப நாய்களுக்குப் பயந்து, திருடன் மீண்டும் நகைகளை திருடிய வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளான்.

Samayam Tamil 3 Sep 2018, 3:50 pm
சென்னை: பெரம்பூரில் மோப்ப நாய்களுக்குப் பயந்து, திருடன் மீண்டும் நகைகளை திருடிய வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளான்.
Samayam Tamil மோப்ப நாய்களுக்குப் பயந்து திருடிய நகைகளை திரும்ப ஒப்படைத்த திருடன்!!
மோப்ப நாய்களுக்குப் பயந்து திருடிய நகைகளை திரும்ப ஒப்படைத்த திருடன்!!


பெரம்பூர் சின்னசாமி தெருவைச் சேர்ந்த இமிதியாஸ் அபூபக்கர் என்பவர், கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார். பின்னர், இரவு 10 மணியளவில் வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதைத் தொடர்ந்து, செம்பியம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அபூபக்கரின் உறவினர்களிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரித்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்புத் தரவில்லை. இதனால், சந்தேகமடைந்த போலீஸார், அவர்கள் அனைவரையும் ஒன்றாக நிற்கவைத்து, தாங்கள் திருடனை நெருங்கிவிட்டோம் எனவும், மோப்ப நாய்களின் உதவியால் இன்னும் இரண்டு நாட்களில் பிடித்துவிடுவோம் என பொய்யாக கூறியுள்ளனர்.

இதனால், பயந்து போன திருடிச் சென்ற 16 லட்ச ரூபாய் மதிக்கத்தக்க 70 சவரன் நகைகளை வீட்டின் வாசல் முன் வைத்துவிட்டுச் சென்றுள்ளான்.இது குறித்து கூறிய போலீஸார், திருடிய நபர் அவர்களுக்கு மிகவும் நெருங்கியவராகத்தான் இருக்க வேண்டும் எனவும், நாங்கள் மோப்ப நாயை வைத்து இரண்டு நாட்களிலேயே பிடித்துவிடுவோம் என சொன்னதை கேட்டு பயந்திருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்