ஆப்நகரம்

கனவுடன் ஓடி வந்த காதல் ஜோடி; விமானத்தில் அனுப்பிய போலீஸ்!

கனவுடன் வீட்டைவிட்டு ஓடி வந்த காதல் ஜோடி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Samayam Tamil 4 May 2021, 2:24 pm
திரிபுரா மாநிலம், அகர்தலா பகுதியை சேர்ந்தவர் ரோபல் ஹோசீன் (22). சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு சொந்த ஊரான அகர்தலா சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த முக்தா ராணி (18) என்ற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது.
Samayam Tamil காதல் ஜோடி
காதல் ஜோடி


கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்; பத்திரிகையாளர்கள் குஷி!

இவர்களது காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தடைந்தனர்.
இதுகுறித்து முக்தா ராணியின் பெற்றோர் திரிபுரா போலீசில் புகாரளித்தனர். அதன்படி திரிபுரா போலீசார் உடனடியாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

எடப்பாடி ராஜினாமா; கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்!

அதன்பேரில் இங்கு தயாராக இருந்த சென்னை போலீசார் விமானத்தில் வந்த காதலர்களை பிடித்து வைத்துக்கொண்டு திரிபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து திரிபுரா போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து காதலர்கள் இருவரையும் திரிபுரா அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அடுத்த செய்தி