ஆப்நகரம்

காய்கறிக்குள் வைத்து முதியவரின் பிணம் கடத்தல்: மடக்கி பிடித்த பொதுமக்கள்!

செங்கல்பட்டு அருகில் காய்கறிக்குள் வைத்து பிணத்தை கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SamayamTamil 20 Feb 2018, 5:56 pm
செங்கல்பட்டு அருகில் காய்கறிக்குள் வைத்து பிணத்தை கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil the old mans deadbody kidnapped in vegetable lorry in chengapattu area
காய்கறிக்குள் வைத்து முதியவரின் பிணம் கடத்தல்: மடக்கி பிடித்த பொதுமக்கள்!


சென்னை செங்கல்பட்டு அருகில் காய்கறி வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வண்டியிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்ற ஒரு குரல் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த வண்டியை மடக்கிப் பிடித்த அப்பகுதி பொதுமக்கள், வண்டியின் காய்கறிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ஆணின் பிணத்தை கைப்பற்றியுள்ளனர்.



மேலும், அந்த வண்டிக்குள் உயிருடன் இருந்த 2 முதியவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர்களை மீட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள், வயதானவர்களை கொன்று அவர்களிடமிருந்து எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பல் என்று தெரியவந்துள்ளது. மேலும், வண்டி டிரைவர் ராஜேஷ் என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வாகனம் திண்டுக்கல் பதிவு எண் கொண்ட வாகனம் என்பதும், அதிலிருந்த இரு முதியவர்களும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த திண்டுக்கல் பதிவு எண் கொண்ட வாகனம் ஜெயின் ஜோசப் ஹாஸ்பிக்ஸ் என்ற தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே இது போன்ற சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து நடந்து வருவதாக, கடந்த 7 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் தூக்குத்தண்டனை அறிவித்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அப்பகுதியில் மற்றொரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி