ஆப்நகரம்

போலீசை தெறிக்க விட்ட ஸ்டாலின்; வீடு தேடி வந்த இன்ஸ்பெக்டர்!

சென்னை அருகே திருவள்ளூரில் பாதிக்கப்பட்டவருக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி அபராத தொகையை உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் திரும்ப வழங்கினார். தமிழக முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Samayam Tamil 17 May 2021, 9:50 am
திருவள்ளூர் செவ்வாப்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இவருக்கு மனநலம் பாதித்த ஒரு மகன் உள்ளார். நேற்று பாலகிருஷ்ணன் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்குவதற்காக திருவள்ளூர் மெடிக்கலுக்கு பைக்கில் வந்துள்ளார்.
Samayam Tamil பாதுகாப்பு பணியில் போலீசார்
பாதுகாப்பு பணியில் போலீசார்


அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி வந்ததாக கூறி பாலகிருஷ்ணனிடம் இருந்து போலீசார் ரூ.500 அபராதமாக வசூலித்துள்ளனர்.

பாலகிருஷ்ணனிடம் மேற்கொண்டு பணம் இல்லாததால் தனது மகனுக்கு மருந்து வாங்காமல் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன் நடந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டு, முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த விவகாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

சொன்னதை செய்த திமுக; மக்கள் வயிற்றில்‘பால்’

இதனை தொடர்ந்து திருவள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உடனடியாக பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து அவருக்கு விதித்த அபராத பணம் ரூ.500ஐ திரும்ப வழங்கினார். மேலும் பாலகிருஷ்ணன் மகனுக்கு தேவையான மருந்தையும் வாங்கி கொடுத்து விட்டு சென்றார். முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்த செய்தி