ஆப்நகரம்

தாம்பரம் அருகே நியாயவிலை கடை அமைப்பதில் திமுகவினர் கடும் மோதல்; முகம் சுளிக்கும் பொதுமக்கள்..!

தாம்பரம் அருகே நியாய விலை கடை அமைப்பதில் திமுகவினர் இடையே கடும் மோதலால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 20 Mar 2023, 6:53 pm
அஸ்தினாபுரம் பகுதியில் நியாயவிலை கடை அமைப்பதில் திமுகவின் இரு தரப்பினர் இடையே மோதல்:
Samayam Tamil தாம்பரம் அருகே நியாயவிலை கடை அமைப்பதில் திமுகவினர் கடும் மோதல்
தாம்பரம் அருகே நியாய விலை கடை அமைப்பதில் திமுகவினர் இடையே கடும் மோதலால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தாம்பரம் மாநகராட்சி அஸ்தினாபுரம் பகுதியில் நியாயவிலை கடை அமைப்பதில் திமுகவின் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் மகேஷ்வரி நகர் பகுதியில் தனியார் கட்டிடத்தில் நியாய விலை கடை JD119 எண் பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கடை இயங்கி வந்த கட்டிடத்தை வங்கி ஜப்தி செய்வதாக தகவல் வெளியான நிலையில், 38-வது வார்டு கவுன்சிலர் சரண்யா மதுரைவீரன் வங்கி தரப்பிடம் 6 மாத கால அவகாசம் கோரியுள்ளார்.


இந்நிலையில் மகேஷ்வரி நகர் பகுதில் உள்ள பூங்கா அருகே அரசு நிலம் 400 சதுர அடியில் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியில் நிர்வாகம் முடிவு செய்த நிலையில், புதிய நியாய விலைக்கட்டிடம் கட்ட தேர்வு செய்த இடத்தில் தற்போது கோவில் இருப்பதாகவும், திருவிழா காலங்களில் கூட்டம் அதிக அளவில் வரும் என்பதால் புதிய நியாயவிலை கட்டிடத்தை கட்ட மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ:

இந்நிலையில் கடந்த 17.03.2022 தேதி இது குறித்து இரு தரப்பினர் இடையே பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி நேரில் சென்று இரு தரப்பினரையும் அழைத்து பேசிவிட்டு, சட்டமன்ற உறுப்பினர் காரில் ஏரி சென்ற உடன் கோவில் நிர்வாக தரப்பினர் இந்த இடத்தை கொடுக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. அப்போது கவுன்சிலர் சரண்யா மதுரைவீரன் தரப்பினருக்கும், கோவில் நிர்வாக தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆபாச வார்த்தைகளால் இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் வசை பாடினர். மேலும் வாக்குவாதம் தள்ளுமுள்ளாக ஏற்பட்டு பின்பு கை கலப்பாக மாறியுள்ளது.

இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும், செல்பேசியில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல் வைத்து செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023: செப் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு‌ வாழ்த்து மழை!

பொதுமக்கள் அதிருப்தி:

இந்த நிலையில் திமுக ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று மட்டும் சொல்லி கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரது உடன்பிறப்புகள் இதுபோன்று நாளுக்கு நாள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார் என்றும் பொதுமக்கள் கடுமையாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி