ஆப்நகரம்

டேபிளுக்கு வந்த ரிப்போர்ட்; முதல்வர் ஸ்டாலின் ஷாக்!

டேபிளுக்கு வந்த ரிப்போர்ட்டை பார்த்து முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்துப்போய் உள்ளனர்.

Samayam Tamil 20 Jan 2022, 7:09 am
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil நோய் பாதித்த தெருவில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது
நோய் பாதித்த தெருவில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது



அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

செருப்பு காட்டிய சீமானுக்கு சிறை?; நெருப்பு பறக்கும்..தமிழக அரசியல்!

இதனால், அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

என்னை சந்தித்தவர்கள் ஜாக்கிரதை; அமைச்சர் அதிரடி தகவல்!

இந்நிலையில் வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர் ஆகிய 6 மண்டலங்களில் ஒட்டுமொத்த பாதிப்பானது 15 ஆயிரத்தை கடந்து உள்ளது. அதேபோல் கடந்த 2 நாட்களாக ஒருநாள் பாதிப்பு 1000 எண்ணிக்கையை கடந்து பதிவாகி வருகிறது.

கடந்த 17ம் தேதி சென்னையில் உள்ள மண்டலங்களின் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, "வடசென்னையில் உள்ள 6 மண்டலங்களின் மொத்த பாதிப்பு 15,846 ஆக உள்ளது. மேலும் ஒருநாள் பாதிப்பு 1,177 ஆக உள்ளது.

இதில் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதி அடங்கிய திருவிக நகர் மண்டலத்தில் அதிகப்பட்சமாக ஒரே நாளில் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்பா... வந்து வண்டில ஏறு... அவரு விமானம் ஏறிட்டாருங்க; அதிகாரிகளை பீதியில் ஆழ்த்திய நோயாளி குடும்பத்தினர்!

அதேபோல் மணலியில் 251 பேருக்கும், மாதவரத்தில் 197 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 161 பேருக்கும், திருவெற்றியூரில் 129 பேருக்கும், ராயபுரத்தில் 53 பேருக்கும் என்று மொத்தம் 1,177 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த 14ம் தேதி மற்றும் 16ம் தேதி வெளியிடப்பட்டு இருந்த அறிக்கையின் ஒப்பீட்டின்படி ஒருநாள் கொரோனா நோய் பாதிப்பு ஆயிரத்து 1,982 ஆக இருந்தது.

ஆனால் அடுத்த 2 நாளில் அதாவது 16ம் தேதி மற்றும் 17ம் தேதி அறிக்கையின் ஒப்பீட்டின்படி ஒரு நாள் கொரோனா நோய் பாதிப்பு சற்று குறைந்து 1,177 ஆக பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருமண மண்டபங்கள், லாட்ஜுகள்; உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

இதன் மூலம் கொரோனாவின் அன்றாட பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு அலைகளின்போது இருந்ததைவிட தற்போதைய மூன்றாவது அலையில் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் அடங்கியுள்ள திருவிக நகர் மண்டலத்தில் உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தனது டேபிளுக்கு வந்த ரிப்போர்ட்டை பார்த்து முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எந்த நேரத்திலும் முதல்வர் அழைத்து விசாரிக்க கூடும் என்ற நிலை உள்ளதால் சுகாதார துறை அதிகாரிகள் என்ன செய்வது? என புரியாமல் தவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி