தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மாணவ, மாணவிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இதை தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்கி உள்ளது. கடந்த 26-07-2021 அன்று தொடங்கிய மாணவர் சேர்க்கை வரும் 10-08-2021 வரை நடக்க உள்ளது.
இதனால் மாணவ மாணவிகள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் விரும்பும் பாடங்களை பயில ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், அரசின் இந்த அறிவிப்பு பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கொரோனா முடக்கம் காரணமாக +2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி ஏராளமானோர் தற்போது தனித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு 06-08-2021 அன்று தொடங்க உள்ளது. அதற்குள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பிக்க காலக்கெடு, 10-08-2021 அன்றுடன் முடிவடைகிறது.
இதனால் தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் தனித்தேர்வர்களால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதன் மூலம் மாணவ, மாணவிகளின் உயர்க்கல்வி கனவு இந்த ஆண்டு நிறைவேறாமல் போய் விடக்கூடிய அபாயம் உள்ளது.
நக்சலைட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி?; இந்து முன்னணி தலைவர் பகீர் குற்றச்சாட்டு!
ஆகவே, தனித்தேர்வர்களும் உயர்கல்வி பெறும் வகையில் தற்போது விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் மாணவ மாணவிகள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் விரும்பும் பாடங்களை பயில ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், அரசின் இந்த அறிவிப்பு பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கொரோனா முடக்கம் காரணமாக +2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி ஏராளமானோர் தற்போது தனித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு 06-08-2021 அன்று தொடங்க உள்ளது. அதற்குள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பிக்க காலக்கெடு, 10-08-2021 அன்றுடன் முடிவடைகிறது.
இதனால் தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் தனித்தேர்வர்களால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதன் மூலம் மாணவ, மாணவிகளின் உயர்க்கல்வி கனவு இந்த ஆண்டு நிறைவேறாமல் போய் விடக்கூடிய அபாயம் உள்ளது.
நக்சலைட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி?; இந்து முன்னணி தலைவர் பகீர் குற்றச்சாட்டு!
ஆகவே, தனித்தேர்வர்களும் உயர்கல்வி பெறும் வகையில் தற்போது விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.