ஆப்நகரம்

தண்ணிருக்கே திண்டாடும் சென்னை வாசிகள்

எந்த குறை இல்லை இந்த சென்னை நகரத்தில் என்று சென்னையை பற்றி பலர் கூறினாலும் குடிக்கக்கூட நீர் இல்லாமல் மக்கள் தினமும் திண்டாடும் நிலை வந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள மக்கள் இரவெல்லாம் தண்ணிரை தேடி பல கிலோமீட்டர் நடக்கின்றனர்.

TNN 28 Jul 2017, 1:37 pm
எந்த குறை இல்லை இந்த சென்னை நகரத்தில் என்று சென்னையை பற்றி பலர் கூறினாலும் குடிக்கக்கூட நீர் இல்லாமல் மக்கள் தினமும் திண்டாடும் நிலை வந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள மக்கள் இரவெல்லாம் தண்ணிரை தேடி பல கிலோமீட்டர் நடக்கின்றனர்.
Samayam Tamil the water scarcity in chennai
தண்ணிருக்கே திண்டாடும் சென்னை வாசிகள்


சென்னையில் உள்ள தியாகராஜ நகர் , கோடம்பாக்கம் , மேடவாக்கம் போன்ற பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு தண்ணீர் வந்து சும்மர் 2 மாதங்கள் ஆகிவிட்டது. அப்படி தண்ணீர் வந்தாலும் மக்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு வருகிறது. இதனால் சிலருக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கிறது என்று இந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்கு சென்றுவிட்டு வரும் பெண்கள் தினமும் இரவில் தண்ணிருக்காக 5 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது. அப்படி தண்ணீர் கிடைத்தாலும் அது குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோடம்பாக்க
ம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மாலை 5 மணிக்கு தண்ணீர் லாரி வந்தாலும் கூட அதிக நேரம் லாரி நிற்பதுகிடையாது என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் சென்னையில் சரியாக மழை பெய்யவில்லை என்றால் சென்னை நகர வாசிகள் மேலும் தண்ணிரின்றி சிரமப்படும் நிலை ஏற்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The water scarcity in Chennai

அடுத்த செய்தி