ஆப்நகரம்

இன்று இரவும் அடிக்கக் காத்திருக்கிறது மழை.!

சென்னையில் இன்று இரவில் மீண்டும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவ்த்துள்ளார்.

TNN 4 Nov 2017, 11:07 am
சென்னையில் இன்று இரவில் மீண்டும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவ்த்துள்ளார்.
Samayam Tamil there is a chance for rain in chennai at today evening
இன்று இரவும் அடிக்கக் காத்திருக்கிறது மழை.!


தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் மழை மீண்டும் தன் கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில் சென்னையின் பல குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் இப்போதைக்கு விட்டுவிட்டு மழை பெய்யும் ஆனால் இரவில் மீண்டும் மழை பெய்யும் என தமிழ்நாடு வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இன்றைய மழைப்பொழிவுக் குறித்து இன்று அவருடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது;
"சென்னையில் பகலில் விட்டுவிட்டு மழை பெய்யும். இது ஆங்காங்கே தேங்கிய நீரை வெளியேற்ற உதவியாக இருக்கும். அதேவேளையில் இரவு நேரத்தில் சென்னையில் மீண்டும் மழை பெய்யும். ஆனால் அது நேற்றைப்போல் கனமழையாக இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் டெல்டா பகுதிகள் முதல் சென்னைவரை மழை நீடிக்கும். சென்னை கடலோரப் பகுதியில் இன்று பின்னிரவில் காற்று குவியும் என்பதால் இன்றிரவும் மழை நீடிக்கும். ஆனால், நேற்றைப்போல் மழை இருக்குமா எனத் தெரியாது"

இவ்வாறு தமிழ்நாடு வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

There is a chance for rain in Chennai at today evening

அடுத்த செய்தி