ஆப்நகரம்

இரவை இதமாக்கிய மழை !

சென்னையில் நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவும் இதேபோல் கன மழை பெய்தது.

TNN 19 Aug 2017, 12:46 pm
சென்னையில் நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவும் இதேபோல் கன மழை பெய்தது. இதனால், சென்னை வாசிகளுக்கு கடந்த இரண்டு நாள் இரவுகளும் குழுமையாக இருந்தது.
Samayam Tamil there is continuous rain in chennai yesterday
இரவை இதமாக்கிய மழை !


சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதல் கடும் வெயில் அடித்து வந்தது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீர் லாரிகளின் வருகைக்காக மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

மழை இந்த முறையும் ஏமாற்றிவிட்டால் சென்னையில் யாரும் வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை வாசிகளுக்கு வரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையால், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதை அகற்ற வழி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

there is continuous rain in chennai yesterday

அடுத்த செய்தி