ஆப்நகரம்

முருகன் தமிழ்; அண்ணன் விநாயகன் ஹிந்தியா? -திருமாவளவன் சர்ச்சை பேச்சு!

முருகனின் அண்ணன் விநாயகரை நாம் 'தமிழ் கடவுள்' என்று அழைக்காதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2021, 6:07 pm
திராவிடர் கழகம் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் திருமாவளவன பேசியது:
Samayam Tamil கோப்பு படம்
இறைவன் முருகன், விநாயகர் குறி்த்து திருமாவளவன் சர்ச்சை பேச்சு

முருகனை தமிழ் கடவுள் என்கிறார்கள். ஆனால் சனாதனத்தில் இருந்து அவரை எப்படி தனித்து பிரித்துப் பார்க்க முடியும்?

விநாயகர், முருகனுக்கு அண்ணன் என்றால், நிச்சயமாக அவரும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும்? ஆனால் விநாயகரை நாம் ஏன் தமிழ் கடவுள் என்று சொல்லவில்லை? ஓரே பெற்றோருக்கு பிறந்த இருவரில் முருகன் தமிழ் கடவுள், விநாயகர் இந்திக் கடவுளா? இது எப்படி சாத்தியம்?

முருகனை மட்டும் தமிழ் கடவுள் என்று சொல்லி, தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவித்துவிட்டால், நாம் அனைவரும் தமிழர்கள் என தலைநிமிர்ந்து விடுவோமா?, என திருமாவளவன் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் போராடுவோர் புரோக்கர்கள்...ஹெச். ராஜா சர்ச்சை பேச்சு!

அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திராவிடர் கழக நிகழ்ச்சியில், மதநம்பிக்கையை சீர்குலைக்கும் விதத்தில், இந்து கடவுள்களை பற்றி பேசுவது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல என்று நெட்டிசன்கள் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி