ஆப்நகரம்

தமிழ்நாடே நோ: சரக்கைப் போட்டு இளம்பெண் போலீசிடம் வாக்குவாதம்!

திருவள்ளூர் அருகே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் குடி போதையில் ஜீப் ஓட்டி வந்து வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியும் ஜீப்பை ஓட்டிக்கொண்டுதான் வீட்டிற்குச் செல்வேன் எனத் தகராறு செய்ததால் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 21 Jan 2021, 10:48 am
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நித்து. 21 வயது நிரம்பிய இவருக்கு நிகில் பாண்டே என்பவருடன் திருமணமாகி உள்ளது. இந்நிலையில் இவர் திருவள்ளூர் அடுத்த மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாகப் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
Samayam Tamil டமில்நாடே வேண்டாம்: சரக்கைப் போட்டு இளம்பெண் போலீசிடம் வாக்குவாதம்!
டமில்நாடே வேண்டாம்: சரக்கைப் போட்டு இளம்பெண் போலீசிடம் வாக்குவாதம்!


இந்த சூழலில் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சக நண்பர்களுடன் மணவாள நகர்ப் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதில் பங்கேற்ற நித்து அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு தனது ஜீப்பை எடுத்துக் கொண்டு அவரே ஓட்டி வந்துள்ளார்.

ஜீப் கிளம்பிய சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்து. இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

மது போதையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறுவதுடன் என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் நண்பர்களிடம் செல்போனில் தகவலைச் சொல்லி வரவழைத்த காவல் துறையினர் அவரை பெற்றோரிடம் ஒப்படைக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

பிரபல மதபோதகர் வீடு, அலுலகங்களில் ஐடி ரெய்டு!

மேலும் அந்த பெண் ஓட்டி வந்த ஜீப்பை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். நாளை காலை பெற்றோருடன் வந்த பிறகு விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் மணவாள நகர்ப் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பாகக் காணப்பட்டது.

அடுத்த செய்தி