காவேரி மருத்துவமனை முன்பு கட்டுக்கடங்காத வகையில் குவியும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.
தற்போது சென்னை ஆழ்வேர்பேட்டை பகுதியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். மேலும் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திமுக கட்சி கொள்கை பரப்புச் செயலாளரான ஆ. ராசா, கருணாநிதியின் உடல்நிலை சீராகி விட்டதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்.
ஆ. ராசாவின் அறிவிப்பை தொடர்ந்து, தொண்டர்கள் கூட்டம் நிம்மதி அடைந்தது. இந்நிலையில் காவேரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றனர்.
இருப்பினும் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து திமுக தொண்டர்களால் பதட்டம் அதிகரித்து வருகின்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் அமைத்துவைத்திருக்கும் பேரிகேடுகள் தடுப்புகளை அகற்றியும், அதை நீக்கியும் திமுக தொண்டர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் காவேரி மருத்துவமனையை சுற்றி போலீஸார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது.
வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.
தற்போது சென்னை ஆழ்வேர்பேட்டை பகுதியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். மேலும் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திமுக கட்சி கொள்கை பரப்புச் செயலாளரான ஆ. ராசா, கருணாநிதியின் உடல்நிலை சீராகி விட்டதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்.
ஆ. ராசாவின் அறிவிப்பை தொடர்ந்து, தொண்டர்கள் கூட்டம் நிம்மதி அடைந்தது. இந்நிலையில் காவேரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றனர்.
இருப்பினும் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து திமுக தொண்டர்களால் பதட்டம் அதிகரித்து வருகின்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் அமைத்துவைத்திருக்கும் பேரிகேடுகள் தடுப்புகளை அகற்றியும், அதை நீக்கியும் திமுக தொண்டர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் காவேரி மருத்துவமனையை சுற்றி போலீஸார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது.