ஆப்நகரம்

மூன்று கிலோ கஞ்சா கடத்தல்... மூன்று பேர் கைது!

ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Samayam Tamil 9 Nov 2020, 11:41 pm
ஆட்டோவில் கஞ்சா கடத்தப்படுவதாக, சென்னை கண்ணகிநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil கஞ்சா கடத்தல்
ஆட்டோவில் கஞ்சா கடத்தல்


அந்த தகவலின்பேரில் கண்ணகிநகர், எழில்நகர் 2வது பிளாக் அருகே போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டபோது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமாக பயணித்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது அதில் கஞ்சா கடத்தி வந்த செம்மஞ்சேரியை சேர்ந்த மோகன்ராஜ் (45), ஐஸ் அவுஸை சேர்ந்த ஜெகநாதன்(48), கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்த மனோகரன்(65), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காணாமல் போன கைக்குழந்தை...போலீஸ் எஸ்.ஐ.க்கு 'மெமோ' !

அவர்களிடமிருந்து 3 கிலோ அளவிலான கஞ்சாவும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின், 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி