ஆப்நகரம்

சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டிய பலே பைக் திருடர்கள் கைது!!

சென்னையில் பல இடங்களில் பைக்குகளைத் திருடி, அதை குறைந்த விலைக்கு விற்ற பைக் திருடர்கள் மூவரை கூடுவாஞ்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 11 Sep 2018, 10:35 pm
சென்னையில் பல இடங்களில் பைக்குகளைத் திருடி, அதை குறைந்த விலைக்கு விற்ற பைக் திருடர்கள் மூவரை கூடுவாஞ்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டிய பலே பைக் திருடர்கள் கைது!!
சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டிய பலே பைக் திருடர்கள் கைது!!


சென்னை கூடுவாஞ்சேரியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், அவர்களை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்காததால், அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர்.

அப்போது நடத்திய விசாரணையில் அவர்கள் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த பழனி தங்கம் என்பதும், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் பல இடங்களில் பார்க் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களைத் திருடி, அதை குறைந்த விலையில் விற்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட தைலாவரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள 26 பைக்குகளை கைப்பற்றியுள்ளனர்.

அடுத்த செய்தி