ஆப்நகரம்

சென்னையில் கூவம் ஆற்றை ஒட்டி கட்டப்பட்டிருந்த மூன்று கட்டடங்கள் இடித்து அகற்றம்!

சென்னை: ஆற்றங்கரையோரம் கட்டப்பட்ட கட்டடங்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

TIMESOFINDIA.COM 24 Jan 2019, 2:08 am
சென்னையில் பாயும் கூவம் ஆற்றின் மறுசீரமைப்பு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அரும்பாக்கம் அருகே நடுவங்கரையில் கூவம் ஆற்றங்கரையில் அமைந்திருந்த 3 வர்த்தக கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
Samayam Tamil Cooum


இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நேற்று மூன்று வர்த்தக கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. ஆனால் ஏராளமான கட்டடங்கள் எஞ்சியுள்ளன.

நடுவங்கரையின் ஆற்றங்கரைப் பகுதிக்கு எதிரே 150 கட்டுமானங்கள் இருக்கின்றன எனத் தெரிவித்தனர். பெரும்பாலான கட்டட உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்து, இடைக்கால தடை பெற்றுள்ளனர்.

பொதுப்பணித்துறையின் தகவலின்படி, கூவம் ஆற்றங்கரையில் 600 வர்த்தக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி