ஆப்நகரம்

சென்னை ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி: மூவர் கைது

சென்னை அயனாவரம் பகுதியில் இயங்கி வந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் மற்றும் நுண்ணிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 24 Jul 2019, 1:39 pm
சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்திய விவகாரத்தில மூவரை கைது செய்து சென்னை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil ATM.


தொழில்நுட்பங்கள் வளர வளர கொள்ளையடிக்கும் முறையும் மாற்றம் பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி சென்னை அயனாவரம் பகுதியில் இயங்கி வரும் ஏடிஎம் மையத்திற்கு சென்ற பயனாளர் ஒருவர் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முயன்றார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்படும் ஸ்கிம்மர் கருவி நமது ஏடிஎம் அட்டையில் இருந்து நமது தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்துகொள்ளும். மேலும் சிறிய அளவில் பொருத்தப்படும் கேமராவில் நாம் பயன்படுத்தும் ரகசிய எண் பதிவாகி விடும். இதன் மூலம் போலி ஏடிம் அட்டைகளை தயாரித்து நமது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியும்.

ஸ்கிம்மர் கருவி குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குவந்த காவல் அதிகாரிகள் ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் மற்றும் சிறிய அளவிலான கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை அதிகாரிகள் அப்பாஸ் அலி, அகமது உள்பட மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களுடன் தொடர்புடையவர்களை தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி