ஆப்நகரம்

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீசார் மோதல்

புரசைவாக்கத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 11 May 2017, 6:01 am
சென்னை : புரசைவாக்கத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil three law college student arrested
சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீசார் மோதல்


சென்னை புரசைவாக்கம் சட்டக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக்குவரத்து போலீசார் ஒரு வழிப்பாதையில் வந்ததாக கூறி விசாரித்தனர்.

இதையடுத்து மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், சில மாணவர்கள் போலீசாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு இரு தரப்பினருக்கும் மோதல் உருவாகியுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், விசாரணை நடத்த வந்த காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், மாணவர்கள் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

three law college student arrested

அடுத்த செய்தி