ஆப்நகரம்

தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீட்டை முதல்வர் வழங்கினார்.

Samayam Tamil 25 Nov 2020, 8:17 am
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்ததில் தீயணைப்பு படை வீரர்கள் கே. சிவராஜன், பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil மதுரை தீ விபத்து
மதுரை தீயணைப்பு படை வீரர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு


உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் தலா 25 வட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் வீரர்களின் குடும்பத்தினர் வசம் இதற்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

'தீ' எனும் செயலி: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'தீ' என்னும் அலைபேசி செயலியை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

நிவர் புயல்... மாவட்டவாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

மேலும் 371 கைக்கணினிகள், அனைத்து தீயணைப்பு -மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் சென்னையில் உள்ள தீ விபத்து கட்டுப்பாடு அறைக்கும் வழங்கப்படுகிறது, இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஜாபர்சேட்டிடம் வழங்கினார்.

அடுத்த செய்தி