ஆப்நகரம்

கொரோனா காலத்தில் நடந்த நல்ல காரியம்... அமைச்சர் பெருமிதம்!

கொரோனா காலத்தில் கபசுர குடிநீருக்கு கிடைத்த அங்கீகாரம் உலக அளவில் தமிழ் மருத்துவத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று அமைச்சர் பாண்டியராஜன் பெருமையுடன் கூறினார்.

Samayam Tamil 1 Jan 2021, 9:59 am
சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் , சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் இணைந்து தமிழும், தமிழ் மருத்துவமும் என்ற விழிப்புணர்வு விழா நடத்தின.
Samayam Tamil தேசிய சித்த மருத்துவமனை -தாம்பரம்
அமைச்சர் பாண்டியராஜன் - தேசிய சித்த மருத்துவமனை, தாம்பரம்


இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு அயோத்திதாஸ் பண்டிதர் மற்றும் திருமூலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்களின் தமிழ் திறனை மேம்படுத்த சொல் உண்டியலை அவர் திறந்து வைத்தார்.

அதன்பின் அமைச்சரின் முன்னிலையில் தமிழ் மற்றும் தமிழ் மருத்துவ மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து சித்த மருத்துவ நிறுவனம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன.

ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் முன் முழங்கிய முதல்வர்!

அதன்பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ் மற்றம் தமிழ் மருத்துவ வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பில் கபசுர குடிநீர் சிறந்து விளங்குவதாக கிடைத்துள்ள அங்கீகாரம், சித்த மருத்துவத்துக்கு உலக அளவில் கிடைத்துள்ள வெற்றி.

அதிமுகவிற்கு மக்களிடம் நற்பெயர் கிடைப்பதை தடுக்கவே பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படுவதை திமுக தடுக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டம்...'குடிமகன்'களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்த விழாவில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்க இயக்குநர் தங்க.காமராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி