ஆப்நகரம்

ரயில் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!

ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக, சென்னையில் ரிசர்வேஷன் கவுன்ட்டர்களும், டிக்கெட் கவுன்ட்டர்களும் நாளை முதல் செயல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 2 Sep 2020, 6:55 pm
சென்னை உள்பட நாடு முழுவதும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது.
Samayam Tamil ticket


இந்த நிலையில், மாநிலத்துக்குள் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையையும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்படுவகாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

, பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு முன்பு அறிவித்திருந்த நிலையில், முதல்வரின் இன்றைய இந்த அறிவிப்பு ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

அவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக, சென்னையில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் நாளை முதல் மீண்டும் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, பயணிகளின் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை (செப்டம்பர் 3) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி