ஆப்நகரம்

திருநங்கைகள் நலன் : சென்னை உயர் நீதிமன்றம் புது உத்தரவு!

திருநங்கைகள் நலன் : சென்னை உயர் நீதிமன்றம் புது உத்தரவு!

TOI Contributor 1 Feb 2017, 4:10 am
சென்னை : சமூகத்தில் திருநங்கைகளுக்கு இருக்கும் தடையை அகற்ற உலகம் முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கான சட்டங்களை பற்றி அறிந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil transgender welfare madras hc wants to know global practices
திருநங்கைகள் நலன் : சென்னை உயர் நீதிமன்றம் புது உத்தரவு!


தேவராஜன் என்பவர் தமிழக அரசுக்கு கொடுத்த மனுவில், 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 10 லட்சம் திருநங்கைகள் இருந்தனர். தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினம் என்று அங்கீகரித்து திருநங்கைகளுக்கு சுய உதவிக்கடன், இலவச பட்டா, வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சலுகைகளையும் பெற்றுள்ளனர். இப்படி சலுகைகள் வழங்கப்பட்டாலும் இன்றும் பொது இடங்களில் திருநங்கைகள் தவறாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்படுகின்றனர் என்றும் பொது மக்கள் மத்தியில் அவர்கள் மீதான பார்வை மாறவில்லை என்றும் தன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு இரண்டு மாதங்களில் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் உலகம் முழுதும் திருநங்கைகளுக்கு வகுக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவும் வழக்கறிஞர் தேவ பிரசாத் என்பவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி