ஆப்நகரம்

சென்னை மெரினாவில் பெண் படுகொலை: இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது!!

மெரினா கடற்கரையில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 7 Nov 2018, 3:12 pm
சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டு ஆட்டோ டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil சென்னை மெரினாவில் பெண் படுகொலை: இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது!!
சென்னை மெரினாவில் பெண் படுகொலை: இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது!!


கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட சிலர், அங்குள்ள நீச்சல் குளத்திற்கு பின்புறம் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சதுக்கம் காவல்துறையினர், அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், உயிரிழந்த பெண் ஒரு பாலியல் தொழிலாளி என்பதை கண்டறிந்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரவு 11 மணியளவில் 4 ஆட்டோ டிரைவர்களுடன் அவர் மெரினா கடற்கரையில் சுற்றியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கொலை செய்தவர்களாக கருதும் இரண்டு ஆட்டோ டிரைவர்களை கைது செய்துள்ளனர். கொலை செய்ததற்கான காரணம் குறித்து, காவல்துறையினர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி