சென்னை: தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகரில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் TN ***6 என்று பதிவெண் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் கூறினர். இதையடுத்து பதிவெண்ணின் இடையில் மறைக்கப்பட்டு, இறுதியில் 6 என குறிப்பிட்ட வண்டியை சென்னை முழுவதும் தேடினர்.
2 வார காலத்திற்கு பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் TN ***6 என்ற வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மாறுவேடத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு, இருவரை கைது செய்தனர்.
அவர்கள் சஞ்சய், சந்தீப் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் இருவர் மீதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 23 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவர்கள் இருவரும் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்து, தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 25 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சிசிடிவி இல்லாத இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதால், குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக, மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Two Chain Snatching theives arrested in Chennai.
சென்னை மாநகரில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் TN ***6 என்று பதிவெண் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் கூறினர். இதையடுத்து பதிவெண்ணின் இடையில் மறைக்கப்பட்டு, இறுதியில் 6 என குறிப்பிட்ட வண்டியை சென்னை முழுவதும் தேடினர்.
2 வார காலத்திற்கு பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் TN ***6 என்ற வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மாறுவேடத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு, இருவரை கைது செய்தனர்.
அவர்கள் சஞ்சய், சந்தீப் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் இருவர் மீதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 23 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவர்கள் இருவரும் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்து, தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 25 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சிசிடிவி இல்லாத இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதால், குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக, மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Two Chain Snatching theives arrested in Chennai.