ஆப்நகரம்

மின்சாரம் தாக்கி இருவர் பலி... ஓஎம்ஆரில் துயரம்

மின்சாரம் தாக்கி கடை ஊழியர்கள் இருவர் உயிரிழந்த துயர சம்பவம், கந்தன்சாவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jan 2021, 6:16 pm
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, கந்தன்சாவடியில் புராணி டூல்ஸ் சென்டரில் வடமாநிலத்தை சேர்ந்த பெரு(35), பிங்கு(22 ) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
Samayam Tamil மின்சாரம் தாக்கி இருவர் பலி
மின்சாரம் தாக்கி இருவர் பலி -சென்னை கந்தன்சாவடி


தங்களது கடைக்கு அருகில் மழைநீர் தேங்கியதை மோட்டார் மூலம் அகற்ற தயார் செய்துவிட்டு சுவிட்ச் போட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில் இருவரும் மயக்க நிலைக்கு சென்றனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

ஆன்லைனில் தில்லாக கிளி வியாபாரம்: குண்டுக்குள் அடைக்கப்பட்ட இளைஞர்கள்!

இதனையடுத்து அவர்களின் பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி.மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தரமணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததையடுத்து அவர்கள் பணிபுரிந்த கடை மூடப்பட்டது.

அடுத்த செய்தி