ஆப்நகரம்

சென்னையில் திடீர் மேகமூட்டத்துடன் சாரல் மழை

சென்னையில் இன்று மதியம் திடீரென்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், சென்னைவாசிகள் உற்சாகமடைந்தனர்.

Samayam Tamil 6 Jun 2018, 3:16 pm
சென்னையில் இன்று மதியம் திடீரென்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், சென்னைவாசிகள் உற்சாகமடைந்தனர்.
Samayam Tamil raind


கோடை வெயில் முடிந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் திடீரென்று கார் மேகம் சூழந்தது. அதுவரை வெளிச்சமாக இருந்த சென்னை திடீரென்று இருளில் மூழ்கியது. சிறிது நேரத்துக்குப் பின்னர், மிதமான சாரல் மழை பெய்தது.

சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தியாகராயநகர் மற்றும் மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் மற்றும் மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக கிண்டி, அசோக்நகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

வானம் தெளிவாக இருந்த நிலையில், திடீரென்று கார் மேகம் சூழ்ந்து வெள்ளமென திரண்டு வந்தது பார்ப்போரை குதூகலச் செய்தது. இதை பலரும் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

அடுத்த செய்தி