ஆப்நகரம்

இன்று அடுத்த அதிரடிக்கு தயாரா? சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின், அமித் ஷா முதல் முறையாக இன்று சென்னை வருகிறார்.

Samayam Tamil 11 Aug 2019, 8:09 am
மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக தலைமையிலான அரசு பதவி ஏற்றுள்ளது. இம்முறை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Samayam Tamil Amit Shah


முதல் அதிரடியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார். அம்மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

Also Read: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு!

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்துள்ளார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணியளவில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளார். இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Also Read: முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளது- எய்ம்ஸ் மருத்துவர்கள் தகவல்!

அதாவது, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்ற பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஆற்றிய உரைகள், சந்திப்புகள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

இதற்கு “லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்” என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு மத்திய அமைச்சர்கள் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

Also Read: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு?

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.

அடுத்த செய்தி