ஆப்நகரம்

2015 விட கொடூரம்: ஜேசிபியில் ஆபத்தான நிலையில் மீட்கப்படும் அவலம்!

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் தெருக்களில் ஆறு போல் ஓடும் தண்ணீர் ஜே.சி.பி மூலம் மீட்கும் ணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Samayam Tamil 28 Nov 2021, 11:54 pm
வட கிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது நேற்று முன் தின மற்றும் நேற்றிரவு பெய்த கன மழையால் ஊரப்பாக்கம், அருள்நகர், ஜெகதீஷ்நகர், ஆகிய பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.
Samayam Tamil 2015 விட கொடூரம்: ஜேசிபியில் ஆபத்தான நிலையில் மீட்கப்படும் அவலம்!


இதன் காரணமாக இங்கு மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் மற்றும் உணவு, பால், ரொட்டி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக அருள்நகர், ஜெகதீஷ்நகரில் தெருக்களில் ஆறு போல் தண்ணீர் செல்வதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

படகு மூலம் மீட்க முயற்சி செய்தனர் தண்ணீர் வேகமாக செல்வதால் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மக்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை மழை வெள்ளத்தால் பாதிக்கப்ட்டுள்ள இந்தப் பகுதி 2015 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீர் அதிக அளவில் இங்கு சூழ்ந்துள்ளது. இனி வரும் காலத்தில் தண்ணீர் குடியிருப்புகளை சூழாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி