ஆப்நகரம்

'மெட்ராஸ் டே’ கொண்டாட்டத்தின் நிறுவனருக்கு இப்படியொரு சிறப்பு செய்த அமெரிக்க தூதர்!

வருடாந்திர ‘மெட்ராஸ் டே’ கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்த நபருக்கு, அமெரிக்க தூதர் இப்படியொரு சிறப்பு செய்துள்ளார்.

Samayam Tamil 22 Aug 2019, 2:46 pm
சென்னை மாநகர் உருவாகி 380 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இது கடந்த ஒருவாரமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியுள்ளது.
Samayam Tamil Madras Day


இதனை கொண்டாடும் வகையில் அமெரிக்க தூதரகத்தின் பொது கட்டிடத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னெத் ஐ ஜஸ்டர் தொடங்கி வைத்தார்.

Also Read: இதோ வந்திருச்சு தண்ணீர்; இனி பிரச்சினை இல்ல- சென்னையைக் காக்க வரும் வீராணம் ஏரி!!

இவருடன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், சென்னை வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம், அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பர்கெஸ் ஆகியோரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

Also Read: Namma Chennai: நம்ம சென்னை பிறந்து வளர்ந்த கதை....!!

இது அமெரிக்கா, தென்னிந்தியா இடையிலான நீண்ட கால கலாச்சாரம், கல்வி, வர்த்தக உறவை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை சிறப்பிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை தூதர் ஜஸ்டர் தொடங்கி வைத்தார்.

Also Read: ’மெட்ராஸ் டே’ தின சிறப்பு நிகழ்ச்சிகள்- தவறாமல் பங்கேற்க இதைப் படிங்க முதல்ல...!

மேலும் ’மெட்ராஸ் டே’ கொண்டாட்டத்திற்கு காரணமான எஸ்.முத்தையாவின் புத்தக தொகுப்புகளை அமெரிக்க மையத்தில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.

அடுத்த செய்தி