ஆப்நகரம்

“போராடிய மாணவர்களை தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்” : கவிஞர் வைரமுத்து பெருமிதம்!

“போராடிய மாணவர்களை தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்” : கவிஞர் வைரமுத்து பெருமிதம்!

TOI Contributor 28 Jan 2017, 10:16 pm
ஜல்லிக்கட்டுக்காக போராடி மாணவர்களை தன் தோளில் சுமந்து கொண்டாடுவதாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vairamuthu hails jallikattu student protestors
“போராடிய மாணவர்களை தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்” : கவிஞர் வைரமுத்து பெருமிதம்!


வைரமுத்துவின் சிறுகதைகள் என்ற புத்தகத்தின் மலையாள பதிப்பு வெளியானது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, மாணவர்களின் போராட்டம் வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதை விட இந்த மாதிரியான சூழல் தமிழ் சமூகத்தில் உருவானது பெரிய வலியாக இருப்பதாக கூறினார். ஜல்லிக்கட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழர் பண்பாடு. அந்தக்காலத்தில் புலியின் பல் தான் தாலியாக உபயோகிக்கப்பட்டது. புலியை கொல்லும் ஆண் மகனை தான் பெண்கள் மணந்தார்கள். ஏனென்றால் புலியை எதிர்க்கும் திறன் உடையவன் தான் தன்னை காப்பாற்றுவான் என்று பெண் நம்பினாள்.

பின்னர் புலி காளையாக மாறியது. காளையை அடக்குபவர்களுக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் இன்று சம்பளம், வேலை தான் திருமணத்தை நிர்ணயிக்கிறது. பொருளாதார ரீதியில் ஆண் தன்னை காப்பாற்றுவானா என்ற புறப்பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது. நான் பார்த்த 50 ஆண்டுகளில் இந்த மாற்றம் என்றால் எதிர்காலத்தில் இன்னும் போராட வேண்டி இருக்கும் என்றார். இந்தப்போராட்டத்திற்கு தமிழர்கள் தள்ளப்பட்டது வலியை தருகிறது என்றார்.

இந்த வெற்றியில் மாணவர்களுக்கு தான் முழு உரிமை இருக்கிறது என்றும், வேறு யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார். தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்ததை பாராட்டுவதாக கூறியுள்ள வைரமுத்து, அதற்கு காரணமாக இருந்த மாணவச்செல்வங்களை தோளில் சுமந்து பாராட்டுவதாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி