ஆப்நகரம்

போலீசாரை மிரட்டும், திரிஷா புகழ் வருண் மணியன்: 3 பிரிவுகளில் வழக்கு!

விசாரணை நடத்தச் சென்ற இடத்தில் போலீசாரையே தொழிலதிபர் வருண் மணியன் மிரட்டியுள்ளார். இதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...

Samayam Tamil 1 Nov 2020, 4:03 pm
கட்டுமான நிறுவன உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியன் மீது 3 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அயனம் பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகாரின் பேரில் கிண்டி போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
Samayam Tamil போலீசாரை மிரட்டும், திரிஷா புகழ் வருண் மணியன்: 3 பிரிவுகளில் வழக்கு!
போலீசாரை மிரட்டும், திரிஷா புகழ் வருண் மணியன்: 3 பிரிவுகளில் வழக்கு!


சென்னையை அடுத்த தையூர் பகுதியில் இரண்டு வீட்டுமனைகளைப் பெறத் திட்டமிட்ட வெங்கடேசன், வருண் மணியனின் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான வீடுகளை வாங்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, 2 வீட்டை வாங்க முன்பணமாக ரூ. 4 லட்சம் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட வருண் மணியன் நிறுவனம் வெங்கடேசனுக்கு வீடும் ஒதுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக வெங்கடேசன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கிடையே வெங்கடேஷன் பணத்தைத் திருப்பி கேட்க வருண் மணியன் நிறுவனத்திற்கும் சென்றுள்ளார். ஆனால், பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்த வருண் மணியன் தரப்பு தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக வெங்கடேஷன் கிண்டி போலீசாரிடம் சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்தார்.

ரோட்டில் 2 கிமீ தூரத்திற்கு வெள்ள நீரை விட்ட இபி ஆபிஸ்!

புகார் தொடர்பாகக் கிண்டி போலீசார் விசாரணை நடத்த வருண் மணியன் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது போலீசாருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வருண் மணியன் மீது கிண்டி போலீசார் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி