ஆப்நகரம்

குடியரசு தினத்தில் வேலூர் விஜய் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்!

குடியரசு தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் வகையில், வேலூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் ரத்த தானம் முகாம் நடத்தியது பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Samayam Tamil 26 Jan 2021, 11:14 pm

ஹைலைட்ஸ்:

  • நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

  • விஜயின் இமேஜை உயர்த்தும் வகையில் அவரது ரசிகர்கள் பொது சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விஜய் ரசிகர்கள் -வேலூர்
குடியரசு தினத்தையொட்டி ரத்த தான முகாம் நடத்திய வேலூர் விஜய் ரசிகர்கள்
நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பல இடங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, சேவைகளை பாராட்டி சான்றிதழ் வழங்குவது மற்றும் சிறந்த பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பதக்கம் வழங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் ரத்த தான முகாம் நடத்தி குடியரசு தினவிழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். பள்ளிகொண்டாவில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவரும் ரத்ததானம் வழங்கினார்.

'துரைமுருகன் தேர்தலில் போட்டியிடுவதை திமுகவினரே விரும்பவில்லையாம்'

இன்று நடைபெற்ற ரத்ததான முகாமில் 64 பேர் ரத்ததானம் வழங்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயல் மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி