ஆப்நகரம்

நக்கலடித்து நெட்டிசன் கருத்து; விஜயகாந்த் மகன் ‘நச்’ பதில்!

பிச்சை எடுத்து இருந்தால் அரசியலில் நாங்கள் வேற லெவலில் இருந்திருப்போம் என சமூக வலைதளவாசியின் கருத்துக்கு விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூலாக பதில் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அநாகரீகமாக கருத்து பதிவிட்ட சமூக வலைதளவாசிக்கு ஏராளமானோர் கண்டனமும், கூலாக பதில் கூறிய விஜய பிரபாகரனுக்கு பாராட்டும், குவிந்தபடி உள்ளது.

Samayam Tamil 1 Jun 2021, 12:08 pm
தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் செல்போன் என்று தான் சொல்ல வேண்டும்.
Samayam Tamil விஜய பிரபாகரன், விஜயகாந்த்
விஜய பிரபாகரன், விஜயகாந்த்


அந்தளவுக்கு யூ டியூப்பில் வீடியோ பார்ப்பது, நகைச்சுவை காட்சிகளை கண்டுகளிப்பது, பழைய திரைப்படங்களை மீண்டும் பார்த்து ரசிப்பது மற்றும் கேம் விளையாடுவது என, பலரும் தங்களது செல்போனிலேயே பொழுதை கழித்து வருகின்றனர்.

இவர்களில் இளம் வயது ஆண்கள், பெண்கள் சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவைதான் கதி என வீடியோக்களை பதிவிட்டு பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்று நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என அனைவருமே செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக சில வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். அந்த வீடியோக்களில் தவசி படத்தில் தனது தந்தை விஜயகாந்த் நடித்து ஆடிய பாடலுக்கு, விஜயபிரபாகரன் வாயசைத்து நடனம் ஆடியுள்ளார்.

மேலும் ஊட்டியில் குதிரை சவாரி செய்வதுபோல வீடியோ, தான் ஆசையாக வளர்த்து வரும் நாய்களுடன் போஸ் கொடுத்து, போட்டோ மற்றும் கடந்த சட்டசபை தேர்தலின் போது பிரச்சாரம் செய்த வீடியோக்கள் ஆகியவற்றையும் பதிவிட்டு உள்ளார்.

ஓட்டுநர்களுக்கு பாடம் கற்பித்த முதல்வர் ஸ்டாலின்; வீடியோ மூலம் சென்னை போலீஸ் ‘விழிப்புணர்வு’!

இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘தேர்தலில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை. எதற்கு இந்த தேவையில்லாத சீன்? போய் பிச்சையெடுத்து பிழைக்கலாம்’ என்று கமெண்ட் செய்து இருந்தார். இவரது கருத்துக்கு சமூக வலைதளவாசிகள் கடும் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய சபதம்; கரூர் மக்கள் கொடுத்து வச்சவங்க தானே!

இந்நிலையில் அவருக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், ‘உங்களின் கருத்துக்கு எனது நன்றி. பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் அரசியலில் வேற லெவலில் இருந்திருப்போம்’ என்று சாதாரணமாக பதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி