ஆப்நகரம்

வேகமாய் நிரப்பும் ஏரி... இந்த ஊர்களுக்கு எல்லாம் வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்துபடவுள்ளதையடுத்து, கிளியாற்றின் கரையோட கிராமங்களின் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Nov 2020, 5:28 pm
செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் மதுராந்தகம் ஏரி தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. இதனையடுத்து ஏரி உபநீரை திறந்துவிட பொதுப் பணித் துறை முடிவு செய்துள்ளது.
Samayam Tamil கோப்பு படம்
மதுராந்தகம் ஏரி செங்கல்பட்டு


இதுகுறித்து பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரியின் நீர் வரத்து அதிகரித்து அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் நிலையில் உள்ளது.

இதனையடுத்து ஏரியின் உபரி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்படவுள்ளது. எனவே இந்த ஆற்றின் இரு கரைகளின் ஓரமும் அமைந்துள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

வெள்ளக்காடான முடிச்சூர்... மொட்டை மாடியில் தஞ்சமடையும் மக்கள்!

கத்திலிச்சேரி, குன்னத்தூர், நீலமங்கலம், முருக்கஞ்சேரி, கருங்குழி, பூதூர், ஈசூர், விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், இருசமநல்லூர் உள்ளி்ட்ட கிராமங்களில் நிலைமை கண்காணிக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கிளியாற்றின் பக்கம் எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் என்றும், தங்களின் பிள்ளைகள், கால்நடைகளையும் ஆற்றின் பக்கம் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி