ஆப்நகரம்

”நாங்க ஜல்லிக்கட்டு நடத்தப் போறோம்”-தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு..!

தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றவில்லை எனில் தடையை மீறி தமிழக பாஜக ஜல்லிக்கட்டு நடத்தும் என அந்த கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

TNN 20 Jan 2017, 1:43 am
தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றவில்லை எனில் தடையை மீறி தமிழக பாஜக ஜல்லிக்கட்டு நடத்தும் என அந்த கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we will conduct jallikattusays tamilnadu bjp president tamizhisai
”நாங்க ஜல்லிக்கட்டு நடத்தப் போறோம்”-தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு..!


டெல்லி சென்றிருந்த தமிழிசை செளந்தர்ராஜன்,நேற்றிரவு விமானம் மூலமாக சென்னை திரும்பினார்.அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி திமுக நாளை அறிவித்துள்ள ரயில் மறியல் போராட்டம் தேவையற்ற ஒன்று.தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவரான முத்தரசன் போன்றோர்,மாணவர்கள் போராட்டத்தை திசை திருப்பிவிட முயற்சி செய்யக் கூடாது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.இல்லையெனில் தடையை மீறி தமிழக பாஜக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.”என தெரிவித்தார்.ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்துகளுக்கு தமிழிசை தனது கண்டனங்களை தெரிவித்தார்.

We will conduct Jallikattu,says Tamilnadu BJP president Tamizhisai

அடுத்த செய்தி