ஜூலை 31ஆம் தேதி வரை தம்ழிநாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை 6ஆம் தேதிக்குப் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 6.7.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
என்னென்ன தளர்வுகள்:
சலூன் கடைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய பகுதிகள் குறித்து இந்த அறிவிப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
என்னென்ன தளர்வுகள்:
- பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
- தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9.00 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும்.
- அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.
- தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
- காய்கறி கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
- வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை), ஏற்கனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படலாம்.
சலூன் கடைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய பகுதிகள் குறித்து இந்த அறிவிப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.