ஆப்நகரம்

சென்னை நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன? மெட்ரோ அளித்த விளக்கம்!

சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிகழ்வு தமிழ்நாடு முழுக்கவே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 22 Feb 2023, 1:32 pm
சென்னையின் பரபரப்பான பகுதிகளில் முக்கியமானது அண்ணா சாலை. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் காலை நேரத்தில் இன்று 10.05 மணிக்கு அங்குள்ள உயரமான கட்டிடங்கள் சிலவற்றில் நில அதிர்வு உணரப்பட்டது.
Samayam Tamil chennai earthquake


நில அதிர்வு எப்படி ஏற்பட்டது?

அண்ணா சாலைக்கு அருகில் இருக்கும் ஒயிட்ஸ் சாலையில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் இந்த அதிர்வை உணர்ந்து பயத்துடன் கட்டிடத்திலிருந்து வெளியேறி சாலைக்கு வந்தனர். அருகில் மற்றொரு கட்டிடத்தின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிலரும் இந்த நில அதிர்வை உணர்ந்து வேக வேகமாக தரை தளத்துக்கு வந்துள்ளனர்.

காவல் துறையினர் விசாரணை!

இது குறித்து தகவல் அறிந்த உடன் காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த நில அதிர்வுக்கு என்ன காரணம், மெட்ரோ பணிகள் காரணமாக இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் நில அதிர்வு! மூன்று மாடி கட்டிடம் குலுங்கியதா?
சென்னை மக்கள் அச்சம்!

தமிழ்நாட்டில் மிகக்குறுகிய இடத்தில் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கின்ற பகுதியாக சென்னை உள்ளது. நாளுக்கு நாள் சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இந்த மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக நகர் முழுவதும் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. அடுக்குமாடி அலுவலகங்களும் வேக வேகமாக எழுந்து வருகின்றன.

போக்குவரத்து நெரிசல்!

பெருகி வரும் மக்கள் தொகையால் உருவாகும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒரு திட்டம் தான் சென்னை மெட்ரோ. ஏற்கெனவே இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுரங்கப் பணிகள்!

பல இடங்களில் மெட்ரோ பணிகள் சுரங்கம் அமைத்து நடைபெறுகின்றன. இதனால் அருகில் உள்ள இடங்களில் லேசான அதிர்வு ஏற்படுவது உண்டு. சென்னை அண்ணா சாலையி மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த போது உருவான பள்ளத்தில் பேருந்தும், காரும் விழுந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் மக்கள் அச்சம் அடைகின்றனர். இந்த சூழலில் சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த அச்சம் அதிகரித்துள்ளது.
எடப்பாடி எடுத்த சர்வே முடிவு: யாருக்கு வெற்றி? ஈரோடு கிழக்கு மக்கள் செம ஹேப்பி!
மெட்ரோ அளித்த விளக்கம்!

ஆனால் சென்னையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கும் மெட்ரோ பணிகளுக்கும் சம்மந்தம் இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் உடனடியாக தங்களது மறுப்பை வெளியிட்டுள்ளது. “அண்ணா சாலையில் உணரப்பட்ட நிலடுக்கம் மெட்ரோ பணிகளால் ஏற்படவில்லை. அந்தப் பகுதியில் எந்த மெட்ரோ பணிகளும் நடைபெறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி