ஆப்நகரம்

குண்டு விழுந்து மூன்று நாட்களுக்குப் பிறகு ‘என்னாச்சி’ என்று கேட்ட மெட்ராஸ் மக்கள்!

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மெட்ராஸ் மீது குண்டு வீசியதாகவும், ஆனால் மெட்ராஸ் மக்கள் அதை மூன்று நாட்களாகியும் அதைப் பற்றி அறியவில்லை எனவும் வரலாற்று ஆசிரியர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

TNN 26 Nov 2017, 2:09 pm
சென்னை: இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மெட்ராஸ் மீது குண்டு வீசியதாகவும், ஆனால் மெட்ராஸ் மக்கள் அதை மூன்று நாட்களாகியும் அதைப் பற்றி அறியவில்லை எனவும் வரலாற்று ஆசிரியர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil when madras was bombed no one knew for three days
குண்டு விழுந்து மூன்று நாட்களுக்குப் பிறகு ‘என்னாச்சி’ என்று கேட்ட மெட்ராஸ் மக்கள்!


சென்னையில் ‘இரண்டாம் உலகப்போரும் மெட்ராஸும்’ என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ராமகிருஷ்ணன்,”இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மெட்ராஸ் நகரத்தின் மீது குண்டு வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், அதற்கான முன்னேற்பாடுகளை மெட்ராஸ் மாநகர நிர்வாகம் செய்து வைத்திருந்தது.

குண்டு வீசும் போது எச்சரிக்கை ஒலி எழுப்புவது, பாதுகாப்பான இடங்களில் பதுங்குவது, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டிய செயல்கள் போன்றவை முன்னேற்பாடாக செய்யப்பட்டிருந்தன.

ஆனால், அதன்பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே அந்த சம்பவம் நிகழ்ந்தது. 1943ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி ஜப்பான் விமானம் ஒன்று மெட்ராஸ் மாநகரத்தின் மீது சில குண்டுகளை வீசியது.

ஆனால், அப்போது சென்னையில் வெள்ளமாக இருந்ததால் பல இடங்களில் மின்சாரம் இல்லாமல், இருள் சூழ்ந்து இருந்தது. இதனால், தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகே மெட்ராஸ் மக்களுக்கு குண்டு விழுந்தது பற்றி தெரியவந்தது. அதில் 2 பேர் மரணமடைந்ததாகவும் அரசு தெரிவித்தது.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அந்தக் காலக்கட்டத்தில் மக்கள் அச்சத்தில் இருந்ததால் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியூர்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி