ஆப்நகரம்

கொலை செய்து கல்குவாரியில் வீசினோம்; கணவனை கொன்ற மனைவி வாக்குமூலம்!

காஞ்சீபுரம் மாவட்டம் கோவூரில் கணவனை கொன்று கல்குவாரியில் சடலத்தை வீசிய மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை செய்தது குறித்து மனைவி பரபரப்பு வாக்குமூலமும் அளித்துள்ளார்.

Samayam Tamil 5 May 2021, 12:30 pm
காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (37). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஸ்கர் அவரது மனைவி உஷா (35) மற்றும் குழந்தைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மாங்காடு போலீசில் புகாரளித்தார்.
Samayam Tamil கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்


இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர் குடும்பத்தினரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், பாஸ்கர் மனைவி உஷா, அண்ணன் பாக்யராஜ் துணையுடன் பாஸ்கரை அடித்து கொன்றது தெரிய வந்தது.

இதையடுத்து மாங்காடு போலீசார் தனிப்படை அமைத்து நேற்று முன்தினம் உஷாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் பாக்யராஜ் (39), அவரது நண்பர்கள் வெங்கடேசன் (40), கோகுல் (24) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

அம்மா உணவகம் மீது தாக்குதல்; கைதான 2 பேரும் இந்த கட்சியா?

இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி உஷா சந்தேகப்பட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த உஷா இரும்பு கம்பியால் பாஸ்கரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் பாஸ்கர் மயங்கியதும் உஷா தனது அண்ணன் பாக்கியராஜை வரவழைத்து உள்ளார். உடனே, அவர் தனது நண்பர்களுடன் வந்து பாஸ்கரை தாக்கி கொலை செய்துள்ளார்.

செங்கல்பட்டில் 11 கொரோனா நோயாளிகள் பலி; ஆக்சிஜன் தட்டுப்பாடு என பகிரங்க குற்றச்சாட்டு!

இந்த கொலையை மறைக்க பாஸ்கர் சடலத்தை எடுத்து சென்று அருகில் உள்ள கல்குவாரியில் வீசிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இவ்வாறு போலீஸ் தரப்புக்கு தெரிய வந்தது.

அடுத்த செய்தி