ஆப்நகரம்

சென்னை மெரினா கடற்கரையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்- போலீசார் தீவிர விசாரணை!!!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில், இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Nov 2018, 2:02 pm
சென்னை மெரினா கடற்கரையில், இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சென்னை மெரினா கடற்கரையில் கொலை செய்யப்பட்டு, பிணமாக கிடந்த இளம்பெண்!!!
சென்னை மெரினா கடற்கரையில் கொலை செய்யப்பட்டு, பிணமாக கிடந்த இளம்பெண்!!!


சென்னை மெரினா கடற்கரையில், இன்று அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட சிலர், அங்குள்ள நீச்சல் குளத்திற்கு பின்புறம், இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், அவர்கள் அண்ணா சதுக்கம் போலீசாருக்கு இதைப் பற்றி தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்தத் தகவலின்படி, அங்கு வந்த அண்ணா சதுக்கம் போலீசார், அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் யார் எனவும், அவரைக் கொலை செய்தது யாரும் எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்